திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டூர் ஊராட்சியில் பர்மா காலனி பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் 953 குடும்ப அட்டைதாரர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். வருவாய் கோட்டாட்சியர் அருள், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ஜெயராம், துணை பதிவாளர் பொது விநியோகம் திட்டம் மற்றும் திருவெறும்பூர் தாசில்தார் ஜெயப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திங்களன்று வழங்கினார். அருகில் ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் பலர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வாசிப்பு இயக்கம் திருச்சியில் நடந்தது. இதில் எழுத்தாளர் துறையூர் சுரேஷ் ஆறுமுகம் எழுதிய, “நான் வாசித்த மனிதர்கள்” நூலினை மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா வெளியிட அதனை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரங்கராஜன் பெற்றுக் கொண்டார். மாவட்டத் தலைவர் சிவ.வெங்கடேஷ், கவிஞர். இளங்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள பொது விநியோக அங்காடியில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை திங்கள்கிழமை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். கந்தர்வகோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.