இயந்திரக் கூடம் அமைக்க அடிக்கல்
தஞ்சாவூர், செப்.23- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், வட்டார வேளாண்மை அலுவல கம் அருகே, வேளாண் மை பொறியியல் துறை சார்பில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இயந்திரக் கூடத்திற்கான கட்டடம் அமைக்கும் பணி, அடிக் கல் நாட்டு விழா திங்கள் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பேரா வூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். அட்மா தலைவர் க. அன்பழகன் முன்னிலை வகித்தார். பேராவூரணி வட்டாரத்தில், வேளாண் பணிகளுக்காக விவ சாயிகளுக்கு வாட கைக்கு விடுவதற்கு 3 டிராக்டர்கள் வர வழைக் கப்பட்டுள்ளன. அவற்றை நிறுத்தி வைப்ப தற்கும், இயந்திரங்களை பாதுகாக்க பயன்படும் வகையிலும் இந்த கட்டடம் அமைக்கப்படு கிறது.
கஞ்சா வியாபாரி கைது
அறந்தாங்கி, செப்.23 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இந்திரா நகர் பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா வியாபாரம் பார்ப்பதாக அறந்தாங்கி காவல் ஆய் வாளர் கருணாகரன் தலைமையிலான காவ லர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படை யில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான காவ லர்கள், வீட்டில் வைத்து கஞ்சா வியாபாரம் செய்த முத்து என்பவரை அறந்தாங்கி காவல் ஆய்வாளர் மற்றும் தனிப் படை காவலர்கள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிராம் எடை கொண்ட 40 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ரூ.16 ஆயிரம் பணம் ஆகி யவற்றை கைப்பற்றி, அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர்.
ஜெயங்கொண்டம் பகுதியில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
அரியலூர், செப்.23- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உட்கோட்டை ஊராட்சி யில் முதலமைச்சர் கிராமச்சாலை மேம் பாட்டு திட்டம் 2024-2025 இன்கீழ், ரூ.62.16 லட்சம் மதிப்பீட்டில், வடக்கு ஆயுதகளம் முதல் ஆயுத களம் மெயின்ரோடு வரை தார்ச்சாலை அமைத் தல், பெரியவளையம் ஊராட்சி,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024 2025 இன்கீழ், ரூ.5.84 லட்சம் மதிப்பீட்டில், பெரியவளையம் காலனி செல்லும் சாலையில் தார்ச்சாலை அமைத்தல், கழுவந்தோண்டி ஊராட் சியில், சட்டமன்ற உறுப் பினர் தொகுதி மேம் பாட்டு திட்டம் 2024-2025 இன்கீழ், ரூ.5.70 லட்சம் மதிப்பீட்டில், கழுவந் தோண்டி காலனி செல்லும் சாலை தார்ச் சாலை அமைத்தல் ஆகிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் துவக்கி வைத்தார்.
அரசு ஊழியர்களாக்க கோரி அக்.4 வேளாண் கூட்டுறவு ஊழியர்கள் உண்ணாவிரதம்
தஞ்சாவூர், செப்.23 - சேலத்தில் அக்.4 இல் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தஞ்சா வூர் மாவட்டத்தில் இருந்து திரளானோர் பங்கேற்பது என ஆலோசனைக் கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி யில், தொடக்க வேளாண்மைக் கூட்டு றவு சங்கப் பணியாளர் அசோஷியேசன் (பேக்சியா) சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப் பணியா ளர் அசோஷியேசன் (பேக்சியா) டெல்டா மண்டலப் பொறுப்பாளரும், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளருமான ஜி.மாதவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ள சங்க பணியாளர்களுக்கு சம்பள சீர மைப்பு குழுவில் உள்ள குறைபாடுகளை களையவும், அதனை நிவர்த்தி செய்யக் கோரி பலமுறை வலியுறுத்தியும் நடவ டிக்கை இல்லை. தகுதியுள்ள அனைத்து விற்பனையாளருக்கும், எழுத்தர் பதவி உயர்வு வழங்கியபின் நேரடி நியமனம் செய்ய எடுத்த கோரிக்கைக்கு இதுவரை அரசு செவி சாய்க்கவில்லை. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியா ளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அக். 4 ஆம் தேதி சேலம் கோட்டை மைதானத் தில், மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் டெல்டா மண்டலத்தில் இருந்தும், தஞ்சை மாவட் டத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கான தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கரூர் மாநகரக் குழு, கும்பகோணம் சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு
கரூர், செப்.23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரக் குழுவிற்கு உட்பட்ட கட்சி கிளை மாநாடுகள் நடைபெற்றன. சின்னாகவுண்டனூர் கிளை செயலாளராக பி. ராஜீவ்காந்தி, ஜெகதாபி செயலாளராக வி.பால சுப்ரமணியன், வடக்கு மேட்டுப்பட்டி (ஏ) செயலாளராக சி.நவீன் மற்றும் வடக்கு மேட்டுப்பட்டி (பி) செயலாளராக பி. யுவராஜ், வடக்கு மேட்டுப்பட்டி பெண்கள் கிளை புதிய செய லாளராக எஸ்.பிரியா, அசோக் நகர் செயலாளராக பி.சதீஸ், நடுமேட்டுப்பட்டி செயலாளராக ஏ.தங்கராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வையாபுரி நகர் கிளைச் செயலா ளராக ஜி.பி.பிச்சைமுத்து, ராயனூர் செயலாளராக வி.சக்தி வேல், கோதூர் செயலாளராக ஆர்.நீலமேகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கும்பகோணம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியத்திற்குட்பட்ட 24 கிளை களில் முதல் கட்ட கிளை மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் கும்பகோணம் ஒன்றியம் திருநல்லூர் கிளைச் செயலாளராக வி.மதியழகன், உத்தமதாணி கிளைச் செய லாளராக ராஜரெத்தினம், கொத்தங்குடி செயலாளராக ஐயப்பன், ஏரகாரம் செயலாளராக தினேஷ்குமார், பதினோரு வேலி செயலாளராக கலியமூர்த்தி, இன்ம்பூர் செயலாள ராக கணேசன், வட கழுக்காணி வட்டம் செயலாளராக கீதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கிளை மாநாடுகளில் சிபிஎம் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர் நாகரா ஜன், குடந்தை ஒன்றியச் செயலாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 6 பேருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது! உயிருக்கு ஆபத்து என இளம்பெண் ஆட்சியரிடம் மனு
தஞ்சாவூர், செப்.23 - தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாட்டில் கடந்த ஆகஸ்ட் 12 அன்று, 23 வயது நிரம்பிய பட்டதாரி இளம்பெண்ணை அப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் சேர்ந்து கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக, இளம்பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கவிதாசன் (25), திவாகர் (26), பிரவீன் (21), வேல்முருகன் (20) மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை கைது செய்தனர். இதில், கவிதாசன், திவாகர், பிரவீன், வேல்முருகன் ஆகிய நான்கு பேர் திருச்சி மத்தியச் சிறையிலும், இரண்டு சிறுவர்கள் தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், கவிதாசன், திவாகர், பிரவீன் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் உரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் தலைமையில், பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரது தந்தை ஆகியோர் ஆட்சியரிடம் அளித்த மனுவில், “பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள். கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்தவர்கள். மேலும் காவல்துறையினர், பண பலமுடைய நபர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள். எனவே, ஆறு பேரும் ஜாமீனில் வெளியே வந்தால், என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் 6 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது. மேலும், அவர்களை சிறையில் வைத்து புலன் விசாரணையை முடித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து, வழக்கு விசாரணையை முடித்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.
எச்.ராஜா மீது கும்பகோணம் காவல் நிலையத்தில் புகார்
கும்பகோணம், செப்.23- நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குறித்து அவதூறாக பேசிய, தற்காலிக தமிழக பாஜக பொறுப்பாளர் எச்.ராஜா மற்றும் மத்திய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கும்பகோணம் கிழக்கு மற்றும் மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் கும்பகோணம் மாநகரத் தலை வர் மிர்ஸாதீன் தலைமையில், கும்பகோணம் மாநகர மேயர் க.சரவணன் முன்னிலையில், மாநகர காங்கிரஸ் துணைத் தலைவர் விஜய் இமானுவேல், வழக்கறிஞர் செந்தில்குமார், விஜயகுமார், கார்த்திகேயன், மணி ராஜ், ரீயாஸ், பிரேம்குமார் மற்றும் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
இலவச கண் பரிசோதனை முகாம்
தஞ்சாவூர், செப்.23 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஸ்ரீவிநாயகா திருமண மஹாலில், லயன்ஸ் சங்கம், ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தினர். முகாமுக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் துரையரசன் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார், ஸ்ரீவிநாயகா ஜுவல்லர்ஸ் உரி மையாளர் இ.வீ.சந்திரமோகன் ஆகியோர் முகாமைத் துவக்கி வைத்தனர். முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர், அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் குழுவினர், கண் நோயாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். 720 பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், 220 பேருக்கு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எறும்பு தின்னியை பிடித்து விற்க முயன்ற 6 பேர் கைது
பெரம்பலூர், செப்.23 - பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்படி பெரம்பலூர் வனசர அலுவலர் பழனிகும ரன் தலைமையில், வனம் மற்றும் வன உயிரின கட்டுப் பாட்டு பிரிவைச் சேர்ந்த வனத்துறையினர் பெரம்பலூர் அருகே செஞ்சேரி பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிட மான முறையில் சாக்கு பையுடன் நின்றுக் கொண்டி ருந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரம்பலூர் அருகே சிறுவாச்சூ ரைச் சேர்ந்த முருகன் (37), சேலம் மாவட்டம், தேக்கம் பட்டியைச் சேர்ந்த வேலு (44), விழுப்புரம் மாவட்டம், பொட்டியத்தைச் சேர்ந்த முருகேசன் (56), திருச்சி மாவட்டம், மணலோடையைச் சேர்ந்த சந்திரசேகர் (32), கண்ணன் (28), திருவண்ணாமலை மாவட்டம், எந்திரப் பட்டுவைச் சேர்ந்த கோபி (29) ஆகியோர் என்பதும், அவர்கள் காட்டு விலங்கான எறும்பு தின்னியைப் பிடித்து விற்க முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிந்து குற்ற வாளிகளான முருகன் உட்பட 6 பேரை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்காச் சோளத்துக்கான பயிர் காப்பீடு தொகையை வழங்கக் கோரிக்கை
அரியலூர், செப்.23 - அரியலூர் மாவட்டத்தில், மக்காச் சோளத்துக்கான பயிர் காப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கு மாறு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம், விவசா யிகள் திங்கள்கிழமை மனு அளித்தனர். சன்னாவூர், கோயில் எசனை, பளிங்காநத்தம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் அளித்த மனுவில், “கடந்தாண்டு (2023-24) பூச்சிகளின் தாக்குதலால் மக்காச் சோளம் பயிர் போதுமான விளைச்சல் இல்லாமல் போனது. இதனை தமிழக வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, நிவாரணம் வழங்கினர். ஆனால் பயிர் காப்பீடு நிறுவனம், அதற்கான காப்பீடுத் தொகையை இதுவரை வழங்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர், காப்பீடு தொகை வழங்கக் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடிய மதுக்கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
பெரம்பலூர், செப்.23 - பெரம்பலூர் அருமடல்பிரிவு, முல்லைநகர், முத்து நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்று கையிட்டு மனு அளித்தனர். அதில், “தங்கள் பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கடை ஒன்று இயங்கி வந்த நிலையில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின. பொது மக்கள் எதிர்ப்பை அடுத்து அந்தக் கடை மூடப்பட்டது. இதனிடையே தற்போது மதுக்கடையை மீண்டும் டாஸ்மாக் நிர்வாகம் திறக்க முயற்சிக்கிறது. இந்த மதுக் கடையை திறக்க கூடாது என்றும், எங்கள் பகுதியில் சாலை, குடிநீர், மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்து கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவிடம் வழங்கினர்.
பட்டாசு விற்பனை மீது விதித்த தடையை நீக்க கோரிக்கை'
அரியலூர், செப்.23 - அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்தி மீது விதிக்கப்பட்ட இடை காலத் தடையை நீக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமியிடம், பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை யாளர்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர். வி.கைகாட்டி பட்டாசுக் கடை உரிமையாளர் ரா.ராம மூர்த்தி உள்ளிட்டோர் அளித்த மனுவில், “கடந்த நான்கு தலைமுறைகளாக பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை கடை நடத்தி வருகிறோம். இதனால் நேரடி மற்றும் மறை முக வேலைவாய்ப்புகளை அளித்து வந்தோம். இந்நிலையில் கடந்தாண்டு விரகலூர் பட்டாசு ஆலை யில் நிகழ்ந்த விபத்தையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலை மற்றும் விற்பனைக் கடைகளி லுள்ள சில குறைகளை நிவர்த்தி செய்யுமாறும், அதுவரை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் மாவட்ட நிர்வா கம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, அதிகாரிகள் தெரி வித்த குறைகள் அனைத்தையும் தற்போது நிவர்த்தி செய்து உள்ளோம். எனவே ஆலை மற்றும் விற்பனைக் கடைகளை மீண்டும் செயல்படுத்த உத்தரவிடுமாறு கோட்டாட்சியரிடம் தெரிவித்து மனு அளித்தோம். ஆனால் கோட்டாட்சியர், ஆட்சி யர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, மீண்டும் இந்த பட்டாசு விற்பனைக் கடைகளை திறக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
மயிலாடுதுறை, செப்.23 - மயிலாடுதுறை மாவட் டம், செம்பனார்கோயில் அருகே மாத்தூர் கிரா மத்தில் ஏரி ஓடை தெரு வைச் சேர்ந்தவர் கோவிந்தம் மாள் (60). இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். வெள்ளியன்று கோவிந்தம் மாள் விவசாய வேலைக்கு சென்றிருந்த நிலையில் அவ ரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலா னது. அப்போது காற்று பல மாக வீசியதால் தீப்பொறி பரவியதில், அருகில் இருந்த மாரியப்பன் (40) என்பவரின் கூரை வீடும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத் தனர். ஆனால் 2 வீடுகளும் முற்றிலும் எரிந்து நாச மாயின. இதில் மாரியப்பன் வீட்டில் இருந்த ரூ.30 ஆயி ரம் மற்றும் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உப யோக பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவலறிந்த தரங்கம்பாடி தாசில்தார் மகேஷ், பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறி ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, புடவை உள்ளிட்ட பொருட் களை வழங்கினார். தொடர்ந்து பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப் பட்டவர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.15 ஆயிரம் மற்றும் அரிசி, புடவை, பாய் உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
திருவாரூர், செப்.23 - பகுத்தறிவு தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51ஏ (ஹெச்) விளக்க பொதுக் கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் என்.டி.இடிமுரசு, மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆரூர் சீனிவாசன் மற்றும் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திராவிட கழக தலைமை கழக பேச்சாளர் நர்மதா, மாநில துணை பொதுச் செயலாளர் மதிவதனி ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.
பள்ளிகளுக்கு யூடைஸ் ப்ளஸ் கூட்டம்
அறந்தாங்கி, செப்.23 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி களின் தலைமை ஆசிரியர்களுக்கு யூடைஸ் ப்ளஸ் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தினை மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் தொடங்கி வைத்தார். பள்ளியின் கட்டமைப்புகள், மாணவர்கள் விவரங்கள், ஆசிரி யர்கள் விவரங்கள், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்கள் போன்ற வற்றை இணையதளத்தில் யூடைஸ் ப்ளஸ் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் யூடைஸ் படிவம் பூர்த்தி செய்வதற்கான அனைத்து தகவல்களையும் பவர் பாயிண்ட் மூலம் தெரிவித்தனர். இக் கூட்டத்தில் தனியார் பள்ளி தாளாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
உலக சிலம்பப் போட்டியில் பங்கேற்கும் பாபநாசம் மாணவிகளுக்கு வாழ்த்து
பாபநாசம், செப்.23 - மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிக் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் உத்தாணியைச் சேர்ந்த கனிஷ்கா மற்றும் பாபநாசம் படுகை புதுத்தெருவைச் சேர்ந்த நித்யஸ்ரீ ஆகிய மாணவிகள் பங்கேற்று, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர். மேலும், மலேசியாவில் அடுத்த மாதம் நடைபெறும் 11 உலக நாடுகள் பங்கேற்கும், உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்த இரண்டு மாணவிகளும் தேர்வாகியுள்ளனர். இந்த போட்டி அக்டோபர் 4, 5, 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், மலேசியாவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள உள்ள இரண்டு மாணவிகளையும் பாராட்டி, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம், மலேசியா சென்று வரும் செலவை ஏற்றுக் கொண்டார். அன்னை சாரதா மகளிர் மன்றம், வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் சாசன செயலர் திலகவதி தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.