districts

img

பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல்

மயிலாடுதுறை, செப்.18 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  மற்றும் சம்பந்தம் மேல்நிலைப் பள்ளி மாண வர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளி  ஆலோசகர் ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கன், 464 மாணவ-மாணவிகளுக்கு  மிதிவண்டி கள் வழங்கி பேசினார்.  அதே போன்று திருக்களாச்சேரி ஹமீதியா மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் என். ராஜ் தலைமை வகித்தார். 86 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார். தொடர்ந்து தரங்கம்பாடி தெரசா  பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மெர்சி  தங்கம் தலைமை வகித்தார். இதில் 313 மாணவிகளுக்கு மிதிவண்டிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

;