பொன்னமராவதி, ஏப்.28-
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் காரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம ஊராட்சி தலைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.
பொன்னமராவதி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலும், காரையூரில் உதவி காவல் ஆய்வாளர் மதியழகன் தலைமையிலும் குற்ற விழிப்புணர்வு கூட்டம் மற்றும் அந்தந்த கிராம பஞ்சாயத்தில் முக்கிய பகுதிகளில் குற்றச் சம்பவங் கள் நிகழாமல் தவிர்க்க சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் உதவி ஆய்வாளர் மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கிரிதரன், ராமாயி மணி, கீதா சோலையப்பன், ராமசாமி, அழகு முத்து, சந்திரா சக்தி வேல், முருகேசன், இக்பால் மற்றும் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்