திருவாரூர், ஜூன் 24 -
திருவாரூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நகராட்சியில் உள்ள பகுதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்து, குப்பைகளை தரம் பிரித்து பெற்று, அவற்றை உரங்கள் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ரூ.87 லட்சம் மதிப்பில் 12 இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் கொடியசைத்து வாகனங்களின் பயன்பாட்டை தொடக்கி வைத்தார். நகர்மன்ற தலைவர் புவனப்ரியா செந்தில், துணைத் தலை வர் அகிலா, நகராட்சி ஆணையர் எஸ்.பிரபாகரன், நகர்மன்ற உறுப்பி னர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்