districts

img

அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் உணவுத் திருவிழா

அறந்தாங்கி, ஆக.30 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா மற்றும் காய், கனி திருவிழா நடைபெற்றது. பள்ளி மாணவர்களின் மிகுந்த ஆர்வத்துடன் சுமார் 450 படைப்புகள் தயாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டன.  இந்நிகழ்விற்கு பள்ளி தாளாளர் கண்ணையன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் ஆனந்த் கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராக வர்த்தக சங்கத் தலைவர் ரெ.தங்கதுரை பங்கேற்றார். நகர்மன்ற உறுப்பினர்கள், பள்ளி மாணவர்களின் இருபால் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை மகேஷ்வரி நன்றி கூறினார்.