districts

img

பொதுமக்களுக்கு உதவ காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி

நாகர்கோவில். பிப். 4 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓட்டுநராக பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.ஸ்டாலின் உத்தரவின்படி, விபத்து முதலுதவி  மற்றும் மாரடைப்பு உயிர் மீட்பு சுவாசம் முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது.   நாகர்கோவில் ஆயுதப்படையில் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களால் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதயம் தொடர்பான பிரச்சனையில் அதன் செயல்படுவது நின்று போகும்போது அல்லது செயல்படுவதில் தடை ஏற்படும்போது சிபிஆர் எனப்படும் உயிர் மீட்பு சுவாசம் எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றியும் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தன்னிச்சையான இரத்த ஓட்டம் மற்றும் சுவாசத்தை மீட்டெடுக்க மருத்துவ உதவி கிடைக்கும் வரை  இதயத்தின் செயல்பாட்டை பாதுகாப்பதற்காக இது செய்யப்படுகிறது என்பது காவலர்களுக்கு விளக்கப்பட்டது.