districts

img

ஆயிரம் பனை விதைகள் நடும் விழா

தஞ்சாவூர், செப்.10 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வலப்பிர மன்காடு ஊராட்சி, பனஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், “கற்றலைக் கொண்டாடும்”, “சுற்றுச் சூழல் பாதுகாப்பு”, “ஆயிரம் பனை விதை கள் நடும் விழா” என முப்பெரும் விழா, பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் சி.கணேசன் தலைமை வகித்தார். இதில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி யும், பனஞ்சேரி கிராமப் பகுதியில் உள்ள  வயல்வெளிகள், குளக்கரைகள், பொது இடங்களில் பனை விதைகளை நட்டும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசி னார்.  இதில், கல்விப் புரவலர் அ.அப்துல் மஜீத், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், ஸ்டார் லயன்ஸ் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், செயலர் ஆதித்யன்  மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.