districts

img

சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்க கருத்து கேட்புக் கூட்டம் நடத்தக் கூடாது!

அரியலூர், நவ.20 - வழக்கு நிலுவையில் உள்ளதால், அரியலூர் சிமெண்ட் ஆலை சுண்ணாம் புக்கல் சுரங்க விரிவாக்க கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று நிலம் அளித்த விவசாயிகள் திங்கள்கிழமை அரியலூர் மாவட்ட  ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா விடம் மீண்டும் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து புதுப்பாளையம், பெரிய நாகலூர், அஸ்தினாபுரம், வாலாஜ நகரம், தாமரைக்குளம், சீனிவாசபுரம் ஆகிய கிராம மக்கள் அளித்த மனுவில்,  “கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு  சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல்  எடுப்பதற்காக நிலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், நாங்கள் கொடுத்துள்ள  நிலத்தில் நவ.28 அன்று சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வ தற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை  அரசு சிமெண்ட் ஆலை நடத்தவுள்ளது. இந்தக் கூட்டம் மேற்கண்ட கிராமங்க ளில் நடத்தப்படாமல், சம்பந்தமே இல்லாத இடத்தில் நடத்தப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் உள்ளபோது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.  மேலும் எங்களுக்கு உரிய இழப்பீடு தரும்வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை  நடத்தக் கூடாது. மீறி நடத்தினால், போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்க ளது வாழ்வாதாரமாக உள்ள குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்போம்” என தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் மனு அளித்த னர்.