புதுக்கோட்டை, ஜூன் 21 -
ஜூன் 30 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.