பொன்னமராவதி, மார்ச் 19 - தொழில்துறையை பாதுகாத்திடவும், விவசாயிகளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத் தவும், மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டியும், நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடி என ஒன்றிய பட்ஜெட்டை திருத்தி அறிவித்திட வேண்டி யும் தொழிலாளர்கள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்துவது சம்பந்தமாக பொன்ன மராவதியில் கூட்டு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பி.ராமசாமி தலைமை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கே.சண்முகம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏனாதி ராசு பேசினர். தொழிலாளர்கள் நடத்தும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தில் பொன்னமராவதியில் விவசாயி கள், விவசாய தொழிலாளர்களை திரளாக பங்கேற்க வைப்பது. மறியலை விளக்கி மார்ச் 26 ஆம் தேதி பொன்னமராவதியில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பேருந்து நிலை யம் முன்பாக பிரச்சாரக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.