districts

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற அறிவுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, டிச.9 - திருச்சி மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத் தின் கீழ் ராபி சிறப்பு பரு வத்தில் 4,987 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ள னர். தற்போது உள்ள ராபி  பருவத்தில் மரவள்ளி, வாழை, வற்றல் மிளகாய் மற்றும் வெங்காய பயிர் களுக்கு 63 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ள னர். வற்றல் மிளகாய்க்கு ஜன.31 ஆம் தேதி வரை யும், வெங்காய பயிருக்கு பிப்ரவரி 15 ஆம் தேதி வரை யும், வாழை மற்றும் மர வள்ளி பயிருக்கு பிப்ரவரி 28  ஆம் தேதி வரையும் பயிர் காப்பீடு செய்ய கால அவகா சம் உள்ளது. இதற்கு பிரீ மியம் தொகையாக ஏக்க ருக்கு வெங்காய பயிருக்கு  ரூ.2,078-ம், வற்றல் மிள காய்க்கு ரூ.1,175-ம், வாழைக்கு ரூ.3,400-ம், மர வள்ளி பயிருக்கு ரூ.1,605-ம்  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது இ-சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.  இந்த பயிர் காப்பீடு பதிவு செய்திட நடப்பு பருவ  அடங்கல், சிட்டா, வங்கிக்  கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகிய வற்றுடன், பதிவு செய்யும் விவசாயியின் பெயர், முக வரி, நிலப்பரப்பு, சர்வே எண்  மற்றும் உட்பிரிவு, பயி ரிட்டுள்ள நிலம் இருக்கும்  கிராமம் ஆகிய விவரங் களை சரியாக அளித்து பதிந்து, உரிய தொகையை செலுத்தி இயற்கை இடர் பாடுகளால் ஏற்படும்  பாதிப்பில் இருந்து பாது காத்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.