districts

img

இனுங்கூரில் வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க வேண்டும்

கரூர், பிப்.20 - இனுங்கூரில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவ னம் அமைக்க வேண்டு மென வலியுறுத்தி குளித் தலையில் விவசாயிகள் கூட்டமைப்பினர் போராட் டம் நடத்தினர். கரூர் மாவட்டம், குளித் தலை ஒன்றியத்திற்குட்பட்ட இனுங்கூரில் மாநில அரசு  விதை பண்ணை செயல் பட்டு வருகிறது. 206 ஏக்கர்  பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த விதைப் பண் ணையானது திருச்சியில் இருந்து கரூர் மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு முன்னர் வேளாண்மை கல்லூரி அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடமாகும். அதன்பின், கரூர் தனி  மாவட்டமாக பிரிக்கப்பட்ட போது, இந்த இடத்தில் மாநில அரசின் விதைப்  பண்ணை அமைக்கப் பட்டது. திமுக தலைமை யிலான அரசு பொறுப்பேற் றதும் கரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க அரசாணை பிறப்பித்தது. தற்போது கரூரில் உள்ள திருமண மண்டபத்தில், தற்காலிகமாக செயல்பட்டு வரும் கல்லூரிக்கு மணவாசி பகுதியில் கட்டடம் கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து 206 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு  வசதியுடன்கூடிய இனுங் கூர் மாநில அரசு விதைப் பண்ணையில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து அரசிடம் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், இனுங் கூர் மாநில அரசு விதைப் பண்ணையில், தமிழக அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டுமென வலியுறுத்தி காவிரி படுகை விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள் செவ்வா யன்று குளித்தலை பேருந்து  நிலையம் காந்தி சிலை முன்பு கவன ஈர்ப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு காவிரி படுகை விவசாயிகள் கூட்ட மைப்பின் தலைவர் எஸ்.ஜெயராமன் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல்வன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.