திருச்சிராப்பள்ளி, ஆக.24-
திருச்சிராப்பள்ளி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகா தெமியில் தன்னம் பிக்கை சிறப்புப் சொற் பொழிவு நடைபெற்றது. அகாதெமி தலைவர் ஆர்.விஜயாலயன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு டாக்டர் பர்வீன் சுல்தானா “துணிந்து செல்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் பேசு கையில், “இளமை என்பது மை நிரம்பிய பேனா. ஆனால் எழுதத் தெரியாது. முதுமை எழுதத் தெரிந்த பேனா. ஆனால் மை இருக்காது. ஆகவே காலத்தை சரியாக அறு வடை செய்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஆனால் பலரிடம் துணிச்சல் இல்லை.
எதிர்பார்ப்புகள் நிறைவேற துணிச்சலு டன் வாழ்க்கைப் போரை எதிர்கொள்ள வேண்டும். துணிச்சலுடன் செயல்படுப வர்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறை வேறும். எந்தச் சூழலிலும் பயத்தை வெளிக் காட்டக் கூடாது. எதிர்மறை கருத்துக்களை உள்வாங்கக் கூடாது. திட்டமிட்டுப் பய ணித்தால் வெற்றி நிச்சயம். அவமானங்க ளைக் கண்டு ஓடி ஒழியக்கூடாது என்றார்.