districts

img

நீதிமன்றத்தை அணுகும் வசதியை அனைவரும் பெற வேண்டும்

புதுக்கோட்டை, பிப்.4 - நீதிமன்றத்தை அணுகும் வசதி ஒவ் வொரு சாமான்ய மனிதனுக்கும் கிடைக்க  வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்கா புர்வாலா கூறினார். பாரம்பரியம் மிக்க புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தைப் பாது காப்பாக பழமை மாறாமல் மறுசீரமைப்பு  செய்வதற்காக ரூ.15 கோடி மதிப்பிலான பணிக்கு அடிக்கல் நாட்டியதோடு, மண மேல்குடி, ஆவுடையார்கோவில், விராலி மலை ஆகிய இடங்களில் மாவட்ட உரிமை யியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றங் களைத் தொடங்கி வைத்தும், புதுக் கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட சமரச மையத்தைத் திறந்து வைத்தும் சனிக் கிழமை மாலை அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டின் ஒவ்வொரு மனிதனுக்கும் நீதி மன்றத்தை அணுகும் வசதி கிடைக்க வேண்டும். இதற்கு பண வசதி, படிப்பு போன்ற எதுவும் தடையாக இருக்கக் கூடாது. 140 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த நீதிமன்றக் கட்டிடம் என்பது செங்கல், சிமெண்ட் போன்றவற்றைக் கொண்ட வெற்றுக் கட்டிடம் அல்ல.  அங்கு மேற்கொள்ளப்படும் வழக்குரைஞர் களின் வாதங்களும், நீதிபதிகளின் தீர்ப்பு ரைகளையும் அடுத்தடுத்த தலைமுறை களுக்கு கடத்தப்பட வேண்டிய வரலாற் றின் சாட்சியங்களாகும். மாவட்டத்தின் அனைத்து வட்டங்களி லும் நீதிமன்றம் கொண்ட இந்த மாவட் டத்தைப் போலவே, அனைத்து மாவட்டங் களிலும் அனைத்து வட்டங்களிலும் நீதி மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். வழக்குரைஞர்கள் சமரசத் தீர்வுகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதனால் வழக்குரைஞர்களின் தொழில் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. 

நீதித்துறைக்கு குறைந்தது ஒரு சதவீதமாவது நிதியை முழுமையாக ஒதுக்கிட, மாநில அமைச்சரவையில் சட்டத் துறை அமைச்சர் பேச வேண்டும். அவ்வாறு செய்தால் நாட்டிலேயே அதிக  நிதி ஒதுக்கீடு செய்யும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும். காகிதமில்லா வழக் காடுதல் என்ற நவீனத் தொழில்நுட்பத் துக்கு வழக்குரைஞர்கள் தங்களை மேம் படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். தமிழ்நாடு மாநில சமரசத் தீர்வு மையத்தின் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஆர்.மகா தேவன் பேசுகையில், ‘அறம் கூறும் அவை யம்’ என சங்க இலக்கியத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. வெறுமனே வழக்குகளில் மட்டுமல்ல, மனித வாழ்க்கையில் அறம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது இம்மண்ணின் தத்துவம். எனவே, சாதாரண ஏழை, எளிய மக்களுக்கும் நீதி கிடைத்திட  எல்லோரும் பணியாற்ற வேண்டும்” என்றார்.  உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் பேசுகையில், “140 ஆண்டுகள் பழைமையான புதுக்கோட்டை நீதிமன்றக்  கட்டிடம் சிறிய அளவில்கூட பழுதான தில்லை. ஆனால், இப்போது கட்டப்படும்  கட்டிடங்கள் 10, 15, 20 ஆண்டுகளில் உடைந்து விழுகின்றன. 18 மாதங்களில்  இந்தப் புனரமைப்புப் பணிகள் முடிக் கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள ரூ.15 கோடிக்கும் மேல் செலவாகும் என் றால், கூடுதலாக ஆகும் செலவினத்துக் கான கருத்துருவை பொதுப்பணித் துறையினர் எங்களுக்கு அனுப்பி வைத் தால், அரசுக்கு அனுப்பி பெற்றுத் தர தயாராக இருக்கிறோம்” என்றார்.  மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பேசுகையில், “வேறெந்த மாவட்டத் திலும் இல்லாத அளவுக்கு, புதுக் கோட்டை மாவட்டத்தில் 12 வட்டங்களி லும் நீதிமன்றம் தொடங்கப்பட்டிருக் கிறது. இதேபோன்ற சூழலை மாநிலம் முழுவதும் உருவாக்க வேண்டும் என்பதி லும், பழமையான கட்டிடங்கள் அதன் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட வேண் டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதி யாக செயல்பட்டு வருகிறார்” என்றார்.  மாநில சுற்றுச்சூழல் துறை அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன், பிற வட்டங்க ளில் இருப்பதைப் போல ஆலங்குடி வட்டத்திலும் சார்பு நீதிமன்றத்தை உரு வாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண் டார். விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதி கள் வி.பவானி சுப்பராயன், ஆர்.விஜய குமார், பி.டி.ஆதிகேசவலு, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் கே.பி. சத்தியமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகி யோர் பேசினர்.  முன்னதாக, மாவட்ட முதன்மை நீதி பதி கா.பூர்ணஜெய ஆனந்த் வரவேற்றார்.  தலைமைக் குற்றவியல் நடுவர் சி.சசி குமார் நன்றி கூறினார்.