தஞ்சாவூர், மார்ச் 4- தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில், அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும், அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்ட, ‘மாலை சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சென்ற ஆண்டு மாணவர் சேர்க்கையில் உறுதுணை யாக இருந்த பேராசிரியர்கள், அலுவலர்களைக் கௌ ரவிக்கும் பொருட்டு அவர்களின் குடும்பத்தாரையும் அழைத்து, இன்னிசைக் கச்சேரி நடத்தப்பட்டது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வி யியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் ரா.தங்கராஜ் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக அதிகளவில் மாணவர் சேர்க்கையில் ஈடு பட்ட முதல் மூன்று பேருக்கு பொன்னாடை அணி வித்து தங்க நாணயம் வழங்கப்பட்டது. மாணவர் சேர்க்கை க்கு துணை நின்ற அனைத்து பேராசிரியர்கள் மற்றும் அலு வலகப் பணியாளர்களுக்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது.