தஞ்சாவூர், ஆக.20-
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில் நிரந்தரமாக இயக்கப் படும் என ரயில்வே வாரியம் அறிவித் துள்ளது.
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் கடந்த 4.6.2022 முதல் (வண்டி எண்.06035 /06036) எர்ணாகுளத்தில் புறப்பட்டு, வேளாங்கண்ணி வரை சென்று மீண்டும் எர்ணாகுளத்திற்கு வந்தடையும் வகை யில் இயங்கி வருகிறது.
இந்த ரயில் சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப் பட்டு, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதி காலை 5.50 மணிக்கு வேளாங்கண் ணியை வந்தடையும். இந்த ரயில் ஞாயிற் றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப் பட்டு மறுநாள் திங்கட்கிழமை நண்பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளத்தை சென்ற டையும்.
வாரம் ஒருமுறை மட்டும் இயங்கி வந்த இந்த சிறப்பு விரைவு ரயிலை, ரயில்வே வாரியம் வாரம் இருமுறை நிரந்தரமாக இயங்கும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில் (வண்டி எண்.16361) எர்ணா குளத்தில் சனிக்கிழமை நண்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும்.
மீண்டும் இந்த விரைவு ரயில் (வண்டி எண்.16362) வேளாங் கண்ணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திங்கட் கிழமை நண்பகல் 12 மணிக்கு எர்ணா குளத்தை வந்தடையும். மீண்டும் எர்ணா குளத்தில் இருந்து திங்கட்கிழமை நண்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு செவ் வாய்க்கிழமை அதிகாலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும். மீண்டும் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை நண் பகல் 12 மணிக்கு எர்ணாகுளத்தை வந்த டையும்.
இந்த விரைவு ரயில் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்க னூர், காயங்குளம், கொல்லம், கொட் டாரக்காரா, புனலூர், செங்கோட்டை, இராஜபாளையம், சிவகாசி, விருது நகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்து றைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டி னம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விரைவு ரயில் பேராவூரணி மற்றும் அதிராம்பட்டினம் ரயில் நிலை யத்தில் நின்று செல்ல வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே உபயோ கிப்போர் ஆலோசனை குழு உறுப்பி னர்-பட்டுக்கோட்டை வட்ட ரயில் பய ணிகள் நலச் சங்கத்தின் தலைவர் ஜெய ராமன், பேராவூரணி நகர வர்த்தகர் கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் ஆகி யோர் திருச்சி கோட்ட ரயில்வே மேலா ளரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.