தஞ்சாவூர், ஜன.8- தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், தமிழ்நாடு சுற்றுச் சூழல் துறை மற்றும் கால நிலை மாற்றத் துறையும், தஞ்சாவூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து, நிலைத்து நீடிக் கும் வாழ்வியல் முறை பற்றிய பயிற்சி பட்டறையை நடத்தியது. இந்நிகழ்விற்கு, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், “மாணவர்கள் இன்றையச் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்க்க, நெகிழி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண் டும். புவி வெப்பமடைதலை தடுக்க வேண்டும்” என்றார். பல்கலைக்கழகப் பதிவாளர் சி.தியாகராஜன் பேசுகையில், “ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை தவிர்க்க வேண்டும். நிலம், காற்றை மாசுப்படுத்தாத வாழ்வியல் முறைகளை பின்பற்ற வேண்டும்” என்றார். மாவட்ட வனத்துறை அலுவலர் வடிவேல், மாவட்டச் சுற்றுச் சூழல் உதவிப் பொறியாளர் இரா.அஜித்குமார், சென்னை சுற்றுச்சூழல் துறை ம.பிரேம்குமார், அறிவியல் புல முதன்மையர் ரெ. நீல கண்டன், மாவட்ட சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப் பாளர் கோ.குமார் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இவ்விழாவிற்கான ஏற்பாடு களை, தஞ்சை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங் கிணைப்பாளர் ச.சிவசுப்பிர மணியன் செய்திருந்தார். இப்பயிற்சி முகாமில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளி களைச் சார்ந்த மாணவர் கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர் களுக்கு சுற்றுச்சூழலை பாதிக்காத மஞ்சள் பை வழங்கப்பட்டது.