districts

img

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்க! - அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.4 - கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பெண்க ளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளை உடன டியாக கைது செய்ய வேண்டும். படு கொலை செய்யப்பட்ட மருத்துவ மாண விக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால் பாண்டி தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் பாபு கோரிக்கையை விளக்கி பேசினார். அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர்  செந்தமிழ் செல்வன், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலா ளர் வி.ரங்கராஜன், மாதர் சங்க மாவட் டச் செயலாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலர்  கண்டன உரையாற்றினர். மாநில துணைத் தலைவர் பெரியசாமி சிறப்பு ரையாற்றினார். தஞ்சாவூர் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தின் மாவட்டத் தலைவர் (பொ) பா. முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.ரெங்கசாமி கோரிக்கையை விளக்கி உரையாற்றி னார். மாநிலச் செயலாளர் எஸ்.கோ தண்டபாணி நிறைவுரையாற்றினார்.