புதுக்கோட்டை, ஜூன் 26-
பாஜக ஆளும் மாநிலங்களில் அம லாக்கத்துறை என்றைக்காவது சோதனை மேற்கொண்டது உண்டா? என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் சு.திருநாவுக் கரசர் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில், “மோடி தொடர்ந்து தமிழ் மொழிக்கு ஆதரவாகப் பேசி வருவதால், தமிழர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்து விட மாட்டார்கள். அமலாக்கத் துறையினர் என்றைக்காவது பாஜக ஆளும் மாநிலங்க ளிலோ அல்லது பாஜகவை ஆதரிக்கும் முதல்வர்களைக் கொண்ட மாநிலங்களிலோ சோதனை நடத்தியிருக்கிறார்களா? கைது செய்திருக்கிறார்களா?
தலைமைச் செயல கங்களில் சோதனை நடத்தியிருக்கிறார் களா? ஆளுநர் தொடர்ந்து விளம்பர வெளிச் சத்தை நோக்கியே பேசிக் கொண்டிருக்கி றார். ஒன்று அவர் ஒன்றிய அரசு சொல்லி இவ்வாறு பேசி வர வேண்டும். அல்லது ஏதா வது பிரச்சனை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கூட்டணி தர்மத்தின்படி நின்று, அதே நேரத்தில் மக்கள் பிரச்சனை களுக்காக திமுக கூட்டணிக் கட்சிகள் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான். பாட்னாவில் நடை பெற்றது முதல் கூட்டம்தான். ஓரிரு மணி நேரங்களில் ஒத்த கருத்தை எட்டிவிட முடி யாது. அடுத்தடுத்த கூட்டங்களில் இந்த ஒற்றுமை மேலும் வலுப்படும்” என்றார்.