திருச்சிராப்பள்ளி, டிச.3 - காலிப் பணியிடங்களில் கிராம சுகாதார செவிலியர்களை உடனடியாக காலமுறை ஊதியத்துடன் பணியமர்த்த வேண்டும்.
யு-வின்-கணினியில் பதிவேற்றம் செய்த பணியினை மீண்டும் பதிவேற்றம் செய்யச் சொல்வதை தவிர்க்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் நடந்த போராட்டத் திற்கு மாவட்டத் தலைவர் காயத்ரிதேவி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி செயல் தலைவர் கோமதி மற்றும் நிர்வாகிகள் பேசினர்.