மயிலாடுதுறை, ஜன.18- மக்கள் ஒற்றுமையை வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 35 -க்கும் மேற்பட்ட இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் நடைபெற்றன. தரங்கம்பாடி ஒன்றியம், டி.மணல் மேட்டில் 25 ஆம் ஆண்டு விளை யாட்டு விழா கிளைத்தலைவர் எஸ். எஸ்.ஸ்ரீதர் தலைமையில் நடை பெற்றது. சிறுவர்கள், இளைஞர் கள், பெண்களுக்கான பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர் களுக்கு சங்கத்தின் மாநில செய லாளர் ஏ.வி.சிங்காரவேலன், முன்னாள் மாநில துணைத்தலை வர் ஏ.ரவிச்சந்திரன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி.சிம்சன், மாவட்ட செயலாளர் அறிவழகன், மாவட்ட தலைவர் ஐயப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஆனந்தி, ஒன்றிய தலைவர் ரஷ்யா, மாண வர் சங்க மாவட்ட தலைவர் அமுல் காஸ்ட்ரோ ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டி உரையாற்றினர். நள்ளிரவு வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவிளையாட்டம்
திருவிளையாட்டம் கிராமத்தில் 22ஆம் ஆண்டு பொங்கல் விளை யாட்டு விழா கிளைத்தலைவர் அறி வரசன் தலைமையில் நடைபெற் றது. விழாவின் துவக்கமாக சிவன் கோவில் அருகிலிருந்து போதைக்கு எதிராக ஏராளமா னோர் பங்கேற்ற சுடர் ஓட்டம் துவங்கியது. தமிழ்நாடு விவசாயி கள் சங்க ஒன்றிய செயலாளர் என். சந்திரமோகன், ஈச்சங்குடி ஊராட்சி தலைவர் புஷ்பமேரி உதயக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். போதை பழக்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு வந்த சுடர் ஓட்டத்திற்கு சாலை யோரம் நின்ற பொதுமக்கள் கையசைத்தும் முழக்கமிட்டும் வரவேற்பளித்தனர்.தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போட்டி களில் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். கலைநிகழ்ச்சிகளும் நடை பெற்றது. விழாவில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளரும், திருவிளையாட்டம் ஊராட்சியின் முன்னாள் தலைவருமான பி.சீனி வாசன், வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் அறிவழகன், மாவட்ட தலை வர் ஐயப்பன், ஒன்றிய தலைவர் ரஷ்யா, சங்க நிர்வாகிகள் கோஷ் மின், ஜோன், வினோத் கண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பூதனூர்
பூதனூர் கிராமத்தில் கிளைத் தலைவர் காரல்மார்க்ஸ் தலைமை யில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான சிறு வர்கள், பெண்கள் பங்கேற்ற னர். முன்னதாக சங்கத்தின் கொடி யினை ஒன்றியத்தலைவர் ரஷ்யா ஏற்றி வைத்தார். முன்னதாக எடுத் துக்கட்டி சாத்தனூர் பேருந்து நிலையத்திலிருந்து விழா நடை பெற்ற பூதனூர் வரை போதைக்கு எதிரான சுடர் ஓட்டம் நடைபெற்றது. அய்யாஸ் மெட்ரிக் பள்ளி நிர்வாக இயக்குநர் அப்துல் பாரி சுடர் ஓட்டத்தை துவக்கி வைத்தார். .சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பவுல் சத்தியராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் காபிரியேல், விவசாயி கள் சங்க ஒன்றிய செயலாளர் என். சந்திரமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கோலப் போட்டி, கயிறு இழுத்தல், பானை உடைத்தல் போட்டிகளிலும், இரவு வரை நடந்த கலைநிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மயிலாடுதுறை, சீர்காழி, செம்ப னார்கோவில், குத்தாலம், கொள்ளிடம் ஒன்றியங்களில் 35 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்,கலைநிகழ்ச்சிகள் வெகுசிறப்பாக நடைப்பெற்றன.