தஞ்சாவூர், நவ.21 - பெரும் நிதிநிறுவன கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 ஐ, திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சோ.பாஸ்கர், மாவட் டத் தலைவர் பி. செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர் ஆர். ராமச்சந்தி ரன், மாவட்டப் பொருளாளர் எம்.பழனி ஐயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், எதிர்கால வளர்ச்சிக்கும் பொது பயன் பாட்டிற்கும் நிலம் எடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் இருந்தா லும், அவற்றை எல்லாம் புறந் தள்ளிவிட்டு கார்ப்பரேட் பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிலங்களையும், நீரையும் தாராள மாக பெரும் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நில ஒருங்கிணை ப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. பொது மக்கள், சுற்றுச்சூழல் பாதிப்பை கணக்கில் கொள்ளாது, தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் தேவை, விளை நிலங்களின் விவசாய தேவைகள் உள்ளிட்ட எதையும் கணக்கில் கொள்ளாது இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பரந்தூர் விமான நிலை யம் அமைப்பதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து, தொடர்ந்து விவசாயிக ளும், மக்களும் போராடி வருகி றார்கள். மதுரை விமான விரி வாக்க நிலையத்திற்கும் நிலங்கள் எடுப்பதை எதிர்த்து மக்கள் போ ராடி வருகிறார்கள். தற்போது ஒருங்கிணைந்த காவிரி டெல்டா மண்டலத்தில் சிப்காட் தொழிற் சாலை வளாகம் அமைப்பதற்கு அரசு அறிவித்துள்ளது. வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவ சாய நிலங்களை விவசாயிகள் அனுமதி இன்றியும், அவர்கள் விருப்பத்திற்கு மாறாகவும் விளை நிலங்களை எடுக்கக்கூடாது. இதற்கு ஆதாரமாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023ஐ, உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் தேசியக் குழு உறுப்பினர் அ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், விதொச மாவட்டச் செயலாளர் கள் சி.பக்கிரிசாமி, ஆர்.வாசு ஆகி யோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனி ஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி, துணைச் செயலாளர் கோ.சக்திவேல், விவ சாய சங்க, விதொச சங்க நிர்வாகி கள் எஸ்.ஞானமாணிக்கம், அபி மன்னன், எஸ். கோவிந்தராஜ், அ.கலியபெருமாள், ச.வடிவேல் மூர்த்தி, கே.முனியாண்டி, அ.அய் யாக்கண்ணு, பி.எம். காதர் உசேன், ஏ.எம்.ராமலிங்கம், து.ரவி, சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் துரை. மதிவாணன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.