தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசின் செய்திகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில், புதிய மின்னணு சுவர் திரையை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் திறந்து வைத்தார். கும்பகோணம் மாநகராட்சி மேயர் க.சரவணன், துணை மேயர் சுப.தமிழழகன், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் இரா.லட்சுமணன், மாநகர நல அலுவலர் மரு.ஆடலரசி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.