திருச்சிராப்பள்ளி, நவ.23- மின்சார சட்டத்திருத்த மசோதா 2022ஐ திரும்பப்பெற வேண்டும், மாநில அரசிடம் உள்ள மின்சார வாரியங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் புதனன்று தில்லி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒருபகுதியாக தில்லியில் நடை பெறும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் புதனன்று திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். செயலாளர்கள் எம்ப்ளாயீஸ் பெடரேசன் சிவசெல்வம், இன்ஜினீயர் சங்க நரசிம்மன், பொறி யாளர் கழக ரெங்கசாமி, சிஐடியு நடரா ஜன், ஐக்கிய சங்க பிரசன்னா, டிஎன்பிஇஓ இருதயராஜ், பழனியாண்டி ஆகியோர் விளக்கிப் பேசினர். இதில் அனைத்து சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.