பொன்னமராவதி, ஏப்.24 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனூர் ஊராட்சி யைச் சேர்ந்த நாத்துப்பட்டி யில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் உள்ள மின்மாற்றியில் குறைந்த மின் அழுத்தம் மூலமே மின்சாரம் விநியோ கம் செய்யப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள மின் விளக்கு, மின் விசிறி, மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகின்றன. எனவே, உரிய அழுத்தத்தில் மின் விநியோகம் செய்ய நடவ டிக்கை கோரி, பொதுமக்கள் சார்பிலும் ஊராட்சி நிர்வா கம் சார்பிலும் பொன்னம ராவதி மின்சார வாரியத்தில் ஓர் ஆண்டாக முறையிடப் பட்டது. ஆனால் இதில் எந்தவித நடவடிக்கையும் இல்லாத தால், திங்களன்று பொன்ன மராவதி மின்வாரிய அலுவ லகத்தில் நாத்துப்பட்டி ஊர் பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பொன்னமராவதி இளமின் பொறியாளர் ஊராட்சித் தலைவர் கிரிதரன், துணைத் தலைவர் சகுபர் சித்தி ஆகி யோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் போராட் டத்தை கைவிட்டனர்.