தஞ்சாவூர், ஏப்.19-
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் ரஹீம் நகரைச் சேர்ந்த முகமது ஜாபர் அலி (58), முக மது அன்சாரி (55) ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து கண்டியூரில் 2015 ஆம் ஆண்டு முதல் நிதிநிறுவன நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த வர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப் படவில்லை.
இதனால், ஏமாற்றமடைந்த 37 பேர் பொருளாதார குற்றப் பிரிவில், கடந்த 2019 ஆம் ஆண்டில் அளித்த புகாரின்பே ரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து ஜாபர்அலியைக் கைது செய்தனர். முகமது அன்சாரியை ஏப்ரல் 6 ஆம் தேதி கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜாபர்அலி வீடு, இவ ரது மகன், மகள் வீடுகள், முகமது அன்சாரி வீடு, இவர் நடத்தி வந்த அலு வலகம் ஆகியவற்றில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் சுதா, செல்வி, கௌசர் நிஷா, கயல்விழி ஆகியோர் செவ்வாய்க்கிழமை சோத னையிட்டனர். அப்போது ஹார்டு டிஸ்க் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றினர்.