districts

img

மின்வாரிய அலட்சியத்தால் கரும்புத் தோட்டம் எரிந்தது சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 1- திருச்சி மாவட்டம் சமயபுரம் நரி மேட்டில் மின்வாரியத்தின் அலட்சியத்தால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் ஐந்து ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து நாசமானதை கண்டித்தும், மின் ஒயர்கள், கம்பங்கள் குறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரிய அதிகாரி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய  நிவாரணம் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியக் குழு சார்பில் புதனன்று சமயபுரம் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர் சந்திரன், ஒன்றியச் செயலாளர் கனக ராஜ் ஆகியோர் விளக்கிப் பேசினர்.  பின்னர் மின்வாரிய உதவி இயக்குநர்  தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், ‘‘பழுதடைந்த மின் கம்பங்களை உடனே மாற்றுவது, மின் கம்பிகளை சரி  செய்வது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்வது’’ என முடிவு செய் யப்பட்டது.

;