திருச்சிராப்பள்ளி, நவ.25- திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனை யின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கேள்வி கேட்ட காரணத்திற்காக, டிஆர்இயு நிர்வாகி ராஜாவை நியாய மற்ற முறையில் இடமாற்றம் செய்துள்ளது பொன்மலை மருத்துவமனை சிஎம்எஸ் நிர்வாகம். பெண் ஊழியர்க ளின் அடிப்படை உரிமை யான சிசிஎல் விடுப்பு வழங்க மறுத்து, 5 நாள் தொ டர்ச்சியாக இரவுநேரப் பணி ரோஸ்டரை மாற்றச் சொல்லி பிசிஎம்டி, எம்.ஏ.எஸ் கூறி யும் சிஎம்எஸ், ஆர்எச், ஜிஓசி நிர்வாகம் பிசிஎம்டி-யின் வார்த்தைக்கு மதிப்பளிக்க வில்லை. ரயில்வே மருத்துவ மனையில் நிலவும் மருந்து, மாத்திரை பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். மருத்துவமனையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தனியார் ஆம்புலன்ஸ் சேவையை ரத்து செய்ய வேண்டும். சிறிய விஷயங் களுக்கு எல்லாம் சார்ஜ் சீட் என மருத்துவமனை ஊழி யர்களுக்கு எதிராக செயல் படுவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி டிஆர்இயு சார்பில் சனிக்கிழமை பொன்மலை ரயில்வே மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டிஆர்இயு திருச்சி கோட்டத் தலைவர் கரிகாலன் தலைமை வகித்தார். இதில் டிஆர்இயு பொது செயலா ளர் ஹரிலால், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஓய்வுபெற்ற ஊழியர் சங்கத் தினர் மற்றும் கோட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.