ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மரணமடைந்த மருத்துவர் அனிதா 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இந்திய மாணவர் சங்கம் சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் திரு.வி.க கல்லூரி முன்பு நடந்த நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் பா.ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வீ.சந்தோஷ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பா.லெ.சுகதேவ், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.