திருச்சிராப்பள்ளி, ஆக.18 - மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் ஞாயிறன்று நடை பெற்றது. இளைஞர் அணியின் மாநிலச் செய லாளர் தாம்பரம் அன்சாரி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் நெல்லை ரியாஸ் வரவேற்றார். மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா சிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ சிறப் புரையாற்றினார். பொது செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ, தமுமுக மாநில பொருளா ளர் ஷபியுல்லாஹ் கான், துணை பொது செயலாளர்கள் தாம்பரம் யாக்கூப், தஞ்சை பாதுஷா, சலிமுல்லாஹ் கான், இளைஞர் அணியின் தலைமை பொறுப் பாளரும் மாநில அமைப்பு செயலாள ருமான புழல் ஷேக் முகமது ஆகி யோர் பேசினர். பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றதை போன்று, தமிழ்நாட்டி லும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடி யாக நடத்தி, அனைத்து மக்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை முறையாக வழங்க வேண்டும். பாலஸ்தீனம், காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவத்தின் அத்துமீறலால் இதுவரை 40,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இதில் 16,500 பேர் பச்சிளம் குழந்தை கள். இதுபோன்ற கொடூரத் தாக்குதலை நடத்தி அப்பாவி பெண்களை, குழந்தை களை, வயதானவர்களை, பத்திரிகை யாளர்களை இனப்படுகொலை யாக ஆயுதங்களை வழங்கி ஆதரவு அளிக்கும் அமெரிக்காவையும், இப் போரை தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காத ஐ.நா சபையையும் இச்செயற்குழு வன்மையாக கண்டிக் கிறது. மேலும், ஆக்கிரமிப்பு இஸ்ரே லோடு வர்த்தக ரீதியான தொடர்பு என்ற பெயரில் ஆயுதங்கள் இந்தியா விலிருந்து அனுப்பப்படுகிறது. அதனை உடனடியாக ஒன்றிய அரசு தடுத்த நிறுத்த வேண்டும். இந்தியா முழுவ தும் குறிப்பாக, தமிழகத்தில் சில பகுதி களில் புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ தொடர்ந்து இஸ்லாமிய இளை ஞர்களை குறிவைத்து, விசாரணை என்ற பெயரில் அத்துமீறி வருகிறது. இது, அப்பாவி இஸ்லாமிய இளைஞர் களின் வாழ்க்கையை கேள்வி குறி யாக்கும் வகையில் அமைகிறது. எனவே சரியான ஆதாரமில்லாமல், அதி காரத்தை பயன்படுத்தி இஸ்லாமிய இளைஞர்களை குறிவைப்பதை என்.ஐ.ஏ நிறுத்த வேண்டும். தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பல குளறுபடிகள் நடை பெற்று வருவதாக ஆழமான சந்தே கம் எழுகிறது. இதனை, உடனே தமிழக அரசு கருத்திற்கொண்டு, 3.5 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கிறதா என விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண் டும். நீண்ட நாள் இஸ்லாமியர்களின் கோரிக்கையாக இருக்கக்கூடிய கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தி தர வேண்டும். நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் பிரத மர் மோடி பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பேசியிருப் பது மதரீதியான நம்பிக்கைகளை சிதைக் கும் வகையில் அமைந்துள்ளது. சிறுபான்மை சமூகங்களாக இருக்க கூடிய இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மத நம்பிக்கையாளர்களின், நம்பிக்கையை குலைக்கும் வகையில் கொண்டு வரப்படுகிற பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது. இப்படி மத பிரிவினைகள் உண்டாக் கும் சட்டங்களை தாக்கல் செய்யக்கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்து கிறோம் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.