ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு, கரூர் மாநகராட்சி காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.