தஞ்சாவூர், பிப். 22 - தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் தேர்தல் புறக்கணிப்பை அறி வித்த கிராம மக்களுடன் வட்டாட்சியர் புதன்கிழமை அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். திருவையாறு வட்டத்தி லுள்ள விளாங்குடி, காரு குடி, இராயம்பேட்டை, திருப் பழனம், சிறுபுலியூர், கடு வெளி, ஆக்கிநாதபுரம், பொன்னாவரை, கல்யாண புரம், தில்லைஸ்தானம், புனவாசல், மேலபுனவாசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங் கள் கிராமங்களைத் திரு வையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தும் நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற மக்களவைத் தேர் தலை புறக்கணிப்பதாக அறி வித்தனர். இது தொடர்பாக திரு வையாறு வட்டாட்சியர் அலு வலகத்தில் வட்டாட்சியர் தர்மராஜ் தலைமையில் புதன்கிழமையன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ‘கிரா மங்களில் விவசாய தினக் கூலி வேலைக்கு செல்பவர் கள் அதிகளவில் உள்ளனர். எனவே அரசு வழங்கும் நூறு நாள் வேலை திட்டம் மூலம் கிடைக்கும் பணி கிடைக்காமல் பாதிக்கப் படுவர். கிராமத்தின் தனி சுயாட்சி பாதிக்கப்படும் என்ப தால், இக்கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியு டன் இணைத்து நகராட்சி யாகத் தரம் உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் வருகிற மக்களவைத் தேர் தலை புறக்கணிப்போம்’ என கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருவை யாறு பேரூராட்சி அலுவல கம் சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவ லர் பேசுகையில்,’ இக்கிரா மங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்து வது தொடர்பாக ஆணை, அரசு வழிமுறைகள் ஏதும் வரப்பெறவில்லை’ என்றார். இதைத்தொடர்ந்து, வரு கிற மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடுவ தாகக் கிராம மக்கள் தெரி வித்தனர். இக்கூட்டத்தில் மண் டலத் துணை வட்டாட்சியர் அம்மு, சரக வருவாய் ஆய்வர் சரஸ்வதி, காவல் உதவி ஆய்வாளர் மதியழ கன், கிராம நிர்வாக அலு வலர்கள் ரேணுகா, துளசி ராமன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் புக ழேந்தி, பாலசுப்பிரமணி யன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ராம், பிரதீப் ராஜ் குமார், விடுதலைச் சிறுத்தை கள் கட்சி தொகுதிச் செயலர் கதிரவன், அதிமுக கிளைச் செயலாளர் திருஞானசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.