திருவாரூர், அக்.18 - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் இதழை கொண்டு செல்லும் வகையில் மாபெ ரும் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னர் பெ.சண்முகம் வந்தார். அப்போது, திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ் தலைமை யில், மார்க்சிஸ்ட் மாத இதழுக்கு முதல் கட்டமாக 75 சந்தா தொகை பெ.சண்முகத் திடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் திருத்துறைப்பூண்டி நகராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.ஜெய பிரகாஷ், மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.