districts

மாற்றுத்திறனாளிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர், ஜூன் 5-  

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், தஞ்சாவூர் மாநகரம், கீழவாசல் பாம்பாட்டி தெரு கிளைக்  கூட்டம், கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.  

    மாநகரச் செயலாளர் சி.ராஜன் சிறப்புரையாற்றினார். மாநகரத் தலைவர் குமார், மாநகரப் பொருளாளர் மோகன்  ஆகியோர் சங்க வளர்ச்சி குறித்து பேசினர்.  

   கூட்டத்தில், புதிய கிளைச் செயலாளராக கலைச் செல்வி, கிளைத் தலைவராக செல்வ லட்சுமி, கிளைப்  பொருளாளராக ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். நிறைவாக மணிகண்டன் நன்றி கூறினார்.  

   புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, உதவித்தொகை பெறாதவர்கள், குடிமனைப் பட்டா இல்லாதவர்கள், மோட்டார் பொருத்திய வண்டி இல்லாதவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை பெற்றுத் தருவது, கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறு வதற்கு மாவட்ட ஆட்சியரை அணுகி மனு அளிப்பது, நீண்ட காலமாக நடத்தப்படாமல் உள்ள மாவட்ட ஆட்சி யர் தலைமையிலான குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.