அரியலூர், ஆக.14 -
அரியலூர் மாவட்டம், தூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்க ளின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க. தர்மராஜன் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில், திருமானூர் ஒன்றியம் தூத்தூர் மற்றும் குருவாடி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கோடை நவரை பட்டம் மற்றும் குருவை நெல் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளில் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. இங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாத தால், 18 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீபுரந்தான், கோவிந்தபுத்தூர், முத்துவாஞ்சேரி ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, தூத்தூர் கிராமத்தில் விரைவில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்” என தெரி வித்துள்ளார்.