districts

img

மிரர் ஹேண்ட் ரைட்டிங்கில் திண்டுக்கல் மாணவி சாதனை

திண்டுக்கல், மார்ச் 10- தமிழில் உள்ள திருக்குறள், தமிழ்த் தாய் வாழ்த்து ஆகிய வற்றை மிர்ரர் ஹேண்ட் ரைட்டிங் கில் எழுதி திண்டுக்கல் பள்ளி மாணவி சாதனை புரிந்துள்ளார்.  திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கி யமாதா தெருவை சேர்ந்தவர் ஜெயந்தன் பாபு. இவர் வெல்டிங்  வேலை செய்து வருகிறார். இவ ருக்கு டெய்சி என்ற மனைவியும், 10 வயதில் சௌமியா என்ற மக ளும், 9 வயதில் பாப்பு சேசுரத்தினம்  என்ற மகனும் உள்ளனர். இதில் சௌமியா திண்டுக்கல் லில் உள்ள அரசு உதவி பெறும் நடு நிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு  படித்து வருகிறார். இவர் பள்ளிப்  படிப்பு ஆரம்பிக்கும் காலத்தி லேயே தமிழ் எழுத்துக்களை திருப்பி எழுதுவதும், தலைகீழாக எழுதுவதும், இடமிருந்து வலமாக வும், வலமிருந்து இடமாகவும் எழுதி வருகிறார். புத்தகங்களை தலைகீழாக திருப்பி படித்தும் வரு கிறார்.  மேலும் மிர்ரர் ஹேண்ட் ரைட்டிங் எழுத்துக்களை எழுதி அசத்தி வருகிறார். அதாவது மிர்ரர் ஹேண்ட் ரைட்டிங் என்ற எழுத்துக்களை நாம் முகம் பார்க் கும் கண்ணாடியில் பார்த்தால் மட்டுமே படிக்க முடியும். இவ்வாறு  சௌமியா தனக்குள் பல்வேறு திற மைகளை வளர்த்து வருகிறார். சௌமியாவின் தந்தை ஜெயந் தன் பாபு கூறுகையில், ‘‘நான் கூலி  வேலை செய்து வருகிறேன். எனது  மகள் தனித்திறமையை வளர்த்து  சமுதாயத்தில் ஒரு நல்ல பெயரை  வாங்க வேண்டும் என ஆசைப்பட் டேன். அதற்காக நான் கூகுளில் தனித்திறமைகள் சம்பந்தமான யூடியூப் நிகழ்ச்சியை தேடினேன். அப்போது ‘டாவின்சி’ என்பவர் ஆங்கில எழுத்துக்களை மிர்ரர் ஹேண்ட் ரைட்டிங் மூலமாக எழுதி சாதனை படைத்தார். எனது மகளும் சாதனை படைக்க வேண்டும் என நினைத்து  இதற்காக பயிற்சி கொடுத்தேன்.  திருக்குறளில் (ஔ) என்ற எழுத்தை  தவிர அனைத்து எழுத்துகளையும் பயன்படுத்தலாம். அதே போல் ஃ,  ய, என்ற 2 எழுத்துகளை தவிர மற்ற எழுத்துகளை இடமிருந்து வல மாகவும், இடமிருந்து வலமாகவும்  எழுதலாம். முதலில் இடது கை யில் சாதாரணமாக எழுத பயிற்சி கொடுத்தேன். பின்னர் வலது கையில் எழுத பயிற்சி எடுத்தார். அதன் பிறகு இடமிருந்து வலமாக வும், வலமிருந்து இடமாகவும் எழுத  தொடங்கினார்.  இதனைத் தொடர்ந்து மிர்ரர் ஹேண்ட் ரைட்டிங் மூலம் திருக் குறள், தமிழ்த் தாய் வாழ்த்து ஆகி யவற்றையும் நீண்ட நாள் பயிற்சி யின் மூலம் எழுதி வருகிறார். இந்த  பயிற்சியின் விளைவாக பல்வேறு தனித்திறமைகளை சௌமியா வளர்த்துக் கொண்டுள்ளார்.  எனது மகன் பாபு சேசுரத்தின மும் அக்காவின் திறமையை கண்டு  அவரும் பயிற்சி எடுத்து வருகிறார். என்னைப் போன்ற ஏழை பெற்றோ ரின் குழந்தைகளின் தனித்திறமை யை அரசு ஊக்கப்படுத்தி தேசிய அளவில் விருதுகள் வாங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்’’ என் றார்.  தனித் திறமையை வளர்த் துள்ள பள்ளி மாணவியை ஆசி ரியர்கள் மற்றும் மாணவர்கள் பாரா ட்டினர்.