திண்டுக்கல், ஜுலை 7- டி.என்.பி.எல். 2024 சீசன் கிரிக்கெட் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றி யை பதிவு செய்தது திண்டுக்கல் டிராகன் அணி. சேலத்தில் தமிழ்நாடு பிரிமியர் லீக் 2024 கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன் அணி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தியது. திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 160 ரன் எடுத்தது. முந்தைய சீசனில் சிறப்பாக விளையாடிய ஷிவம் சிங் 51 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். பாபா இந்திரஜித் 33 ரன்கள் எடுத்தார். திருச்சி அணியின் ஈஸ்வரன் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். டி.என்.பி.எல் தொடரில் ஹாட்ரிக் எடுத்த 5வது பந்து வீச்சாளர் என்ற சாதனையாளரானார் ஈஸ்வரன். திருச்சி அணியினர் திண்டுக்கல் டிராகன் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ராஜ்குமார் 17 பந்துகளில் 31 ரன்களை எடுத்து திருச்சி அணியின் நம்பிக்கையாளரானார்.மற்ற மட்டையாளர்கள் 30 ரன்களுக்கு குறைவாக எடுத்து தோல்வியை தழுவினர். திருச்சி அணி 20 ஓவர்களில் 144 ரன்களை எடுத்து திண்டுக்கல் டிராகனிடம் தோல்வியை தழுவியது. திருச்சி அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் திண்டுக்கல் டிராகன் அணியின் கேப்டன் அஸ்வினுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட மற்ற வீரர்கள்.