districts

img

விவசாய நிலத்தை பாழாக்கும் சித்தம்பாடி மணல் குவாரியை மூடுக! விவசாயிகள் முற்றுகை போராட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 11 - மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோவில் ஒன்றியம் மருதம் பள்ளம் அருகே சித்தம்பாடி கிராமத் தில் விதிகளை மீறி அதிக அளவு  ஆழத்திற்கு மணல் கொள்ளைய டிக்கும் மணல் குவாரியை விவசா யிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியி னர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். செம்பனார்கோவில் ஒன்றியம் மருதம்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம், கிடங்கல், நத்தம் ஆகிய பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வரு கின்றன.  சட்டவிதிகளை மீறி 20 அடி ஆழத்திற்கும் மேல் மணல் மற்றும் சவுடு மண் தோண்டி எடுப்பதால், அப்பகுதிகளில் விவசாயம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. குவாரி களின் நடவடிக்கைகளை கண்கா ணிக்க வேண்டிய வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரி களோ லஞ்சத்தை பெற்றுக் கொண்டு  கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனிடையே மருதம்பள்ளம்-சித்தம்பாடி கிராமத்தில் சாரங்கம் ஆசாரி என்ற விவசாயிக்கு சொந்த மான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குவாரியில் நாள்தோறும் நூற்றுக் கணக்கான லாரிகளில் மண் எடுத்து  செல்லப்படுகிறது. இதுவரை 20 அடி  ஆழத்தையும் தாண்டி மண் எடுத்துள் ளதால், நீர் சுரந்து அப்பகுதியே ஏரி  போன்று காணப்படுகிறது. அந்த குவாரியை மூடக் கோரி விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா ளர் யூ.சண்முகம், தலைவர் தெட்சி ணாமூர்த்தி, பொருளாளர் பன்னீர் செல்வம், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக் குழு  உறுப்பினர் வீ.எம்.சரவணன் மற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

சித்தம்பாடி குவாரியால் சுற்றி யுள்ள விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. குவா ரியை ஒட்டி பயிரிடப்பட்டுள்ள நிலக் கடலை பயிர்கள் முறையாக வளரா மல் இருக்கின்றன. தொடர்ந்து இப்பகுதியில் மணல் குவாரிகள் செயல்பட்டால், வழக்கமாக பயிரி டப்பட்டு வந்த  நிலக்கடலை, பருத்தி,  நெல் ஆகியவற்றை கைவிட்டு விவ சாயிகள் வேறு வேலைக்கு செல்ல  வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் செம்ப னார்கோவில் ஒன்றியச் செயலாளர் யூ.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறி வித்துவிட்டு, திரும்பும் திசையெல் லாம் குவாரிகள் செயல்பட அரசு  அனுமதி அளித்திருப்பது கண்ட னத்திற்குரியது. நான்கு வழிச்சாலை பணிக்காக, இப்பகுதியில் ஏராள மான குவாரிகள் செயல்பட அனுமதி யளித்துள்ள கனிம வளத்துறை இதை  பயன்படுத்தி, சட்ட விரோதமாக செயல்படும் குவாரிகளுக்கும் அனு மதி அளித்திருக்கிறது.  இப்பகுதியிலிருந்து 2 கி.மீட்டர்  தொலைவிலேயே கடற்கரை உள்ளது. மணல் குவாரிகள் அதி களவு ஆழத்தை தோண்டுவதால், விவசாயப் பகுதிகளில் உப்புநீர் புகுந்து, சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்க ளில் சாகுபடி செய்யப்படும் விவசா யம் கடுமையாக பாதிக்கிறது என்றார். உடனடியாக சித்தம்பாடி குவா ரியை மூடவில்லையெனில் போராட் டங்களை நடத்துவோம் என தெரி வித்துள்ளார்.

சாலை மறியல்
விவசாயத்தை பாதிக்கும் குவாரி களை மூட வேண்டுமென பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், போராட்டங்களை நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆக்கூரை அடுத்துள்ள அப்பராசப்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சங்கத் தின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் யூ.சண்முகம் தலைமை யில், மணல் லாரிகளை சிறைபிடித்து  சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் வீ.எம்.சர வணன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் தெட்சிணாமூர்த்தி, பொரு ளாளர் பன்னீர்செல்வம் மற்றும் விவ சாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.