ஸ்ரீவில்லிபுத்தூர், நவ.28- வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க, ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அகழிகள் அமைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புலிகள் காப்ப கத் துணை இயக்குநர் தேவராஜ் தெரி வித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மம்சாபுரம், செண்ப கத்தோப்பு, அத்திதுண்டு பகுதிகளில் தோட்டத் திற்குள் புகுந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி யதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர். இதனால் காட்டு யானைகள் இடம்பெயர்ந்து திருவண்ணாமலை அருகே உள்ள பந்தப்பாறை பகுதியில் 20 நாட்கள் முகாமிட்டு, இரவு நேரங்களில் வெங்கடேஸ்வரம் கிரா மத்திற்கு உட்பட்ட கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ண சாமி, பைசா ராமர், பாப்பாத்தி, காளியம்மாள், கோவிந்தராஜ், சுப்ரமணி, பால்சாமி, பாஸ்கர், ராஜா உள்ளிட்ட விவசாயிகளுக்கு உட்பட்ட 200 ஏக்கர் விவசாய நிலத்தில் தென்னை, மா, வாழை மற்றும் ஊடுபயிர்கள் பனைமரம் உள்ளன. கடந்த 20 நாட்களாக பெரும்பாலான விவ சாயிகளின் தோட்டங்களில் ஒட்டுமொத்தமாக வாழை மற்றும் தென்னை மரங்களை அழித்து விட்டதோடு தண்ணீர் பாய்ச்சுவதற்கு பயன் படுத்தக்கூடிய பைப் லைனையும் சேதப்படுத்தி விட்டது. இந்த பகுதியில் தொடர்ந்து ஏழு யானை கள் நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மூன்று யானைகளின் அட்ட காசம் தொடர்ந்து இருப்பதாக தெரிவிக்கின்ற னர் புதனன்று கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணி, கோவிந்தராஜ், பாஸ்கர், ராஜா உள்ளிட்டோரின் காடுகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விவசாயத் தோட் டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரு வதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேக மலை புலிகள் காப்பகத் துணை இயக்குநர் அலு வலகத்திற்கு வந்து முறையிட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வனச்சரகர் செல்லமணி, சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். அதற்கு இழப்பீடு வேண்டாம் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். தொடர்ந்து மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜை விவசாயிகள் சந்தித்தனர். அவர்களிடம் பேசிய புலிகள் காப்பகத் துணை இயக்குநர் தேவராஜ், இரு வாக னங்களில் கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மலையடிவாரப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானை நடமாட்டம் உள்ள பகுதி களில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப் படும். வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியே வருவதை தடுக்க மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்ட அகழிகள் 2016-ம் ஆண்டுக்கு பின் சீரமைக்கபடவில்லை. தற்போது செண்பகத்தோப்பு, அத்திதுண்டு, பந்தப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலையடிவாரத்தில் அகழிகள் ஏற்படுத்த திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதற்காக டெண்டர் விடப்பட்டு அகழிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனின் கவனத்திற்கு கொண்டு சென்றார். மாவட்ட ஆட்சியர் மேகமலை புலிகளுக்காக துணை இயக்குனரிடம் பேசியதன் அடிப்படையில் பந்த பாறை முதல் ரெங்கர் தீர்த்தம் வரை ஒன்பது அடி அகலமும், 6 அடி ஆழமும் கொண்ட அகழிகள் வெட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜேசிபி மூலம் வெட்டப்பட்டு வருகிறது. இதேபோல் அடுத்த கட்டமாக செண்பகத்தோப்பு புளியமரத்து ஊரணி பகுதியில் அகழி வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள், இந்த தீர்வு நிரந்தரமாகாது. முறையாக அகழிகள் வெட்டுவதோடு, சோலார் மின்வேலிகள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதோடு, வெட்டப்படக்கூடிய அகழிகளும் சரியான அளவோடு வெட்டப்படவில்லை. முறையாக 7 அடி அகலம், 9 அடி ஆழத்தோடு வெட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். மாவட்ட ஆட்சியரும், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனரும் விவசாயிகளின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.