districts

img

தொடக்கப் பள்ளிக்கு சமையல் கூடம் கட்டித் தரக்கோரி ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக.01- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெள்ளியணை பகுதி கிளைகள் சார்பில்  ஆர்ப்பாட்டம்  வெள்ளியணை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்றது. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை ஒன்றி யம்,  வெள்ளியணை  ஆரம்ப சுகாதார நிலை யத்தில் 24 மணி நேரமும் மருத்துவர், செவிலி யர்கள் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளி யணை ஏரிக்கு காவிரி ஆற்றில் வரும் உபரி நீரை பம்பிங் மூலம்  கொண்டு வர வேண்டும். வடக்கு மேட்டுப்பட்டியில் தொடக்கப் பள்ளிக்கு சமையல் கூடம் கட்டிடம் கட்டி தர வேண்டும். வெள்ளையணை சமத்துவ புரத்தில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கரூர் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்‌.பி.ராஜேந்தி ரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர்கள்  எம்.தண்டபாணி, ஆர்.ஹோச்சிமின் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.