திருச்சிராப்பள்ளி, ஜன.7 - மக்களைத் தேடி மருத்துவ பணியாளரை தாக்கிய குண்டர்களை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மக்க ளைத் தேடி மருத்துவ பணியில் இருந்த மக்கள் நல பணியாளர் விஜயலட்சுமியை, சாதிப் பெயரை சொல்லி குண்டர்கள் தாக்கி யுள்ளனர். குண்டர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்ய வலியுறுத்தி சிஐடியு மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் சனிக் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் அண்ணாசிலை அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் லோகேஸ்வரி, மாவட்டச் செயலாளர் வள்ளி, மாவட்டப் பொருளாளர் கௌசல்யா, மாவட்ட துணைச் செயலாளர் சுகன்யா ஆகியோர் பேசினர். இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டனர்.