தஞ்சாவூர், டிச.23 - ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை ஊதியம் மற்றும் அனைத்து விடுப்புகளையும் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அனைவரையும் இணைக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை, நிறுத்தி வைக்கப் பட்டுள்ள ஈட்டிய விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவ லர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உணவு இடைவேளையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான கி.சுரேஷ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சு. சடையப்பன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான ஸ்ரீ மகேஷ் கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜசேகர் நன்றி கூறி னார். பட்டுக்கோட்டை இதேபோல், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்டச் செய லாளர் கை. கோவிந்தராஜன் தலைமை வகித்தார். இதில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி னர்.