பெரம்பலூர், பிப்.28- ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் குதரத்துல்லா தலைமை வகித்தார். மாவட்ட தொண்டர் அணி செயலாளர் பீர் முகமது வரவேற்புரை ஆற்றினார். தலைமை பிரதிநிதி சுல்தான் மொய்தீன், தலைமை செயற்குழு உறுப்பினர் மீரா மொய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் முகமது இலியாஸ், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் முகமது இலியாஸ் அலி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ரினோ பாஸ்டின், பெரம்பலூர் மக்கா பள்ளிவாசல் தலைமை இமாம் முஹமது அப்ராருல் ஹக், சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் பொதக்குடி ரியாஸ் ஆகியோர் உரை ஆற்றினார். மாவட்டப் பொருளாளர் சையது ஹுசேன் நன்றி தெரிவித்தார்.