கும்பகோணம், பிப்.23- கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றள வில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாச்சி யார்கோவில் அரசு மருத்துவ மனையில் 24 மணி நேரம் மருத்துவர்கள் பணியிலி ருக்க வேண்டும். போதுமான செவிலியர்கள், ஊழியர்கள் நியமிக்க வேண்டும். பிர சவம் பார்க்க பெண் மருத்து வர் நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றி யம் சார்பில் மருத்துவமனை அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஒன்றி யக்குழு உறுப்பினர் பி. ஆனந்தன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் சி.ஜெய பால், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலா ளர் எஸ்.பழனிவேல் கிளைச் செயலாளர் பார்த்திபன், எஸ்.லதா, ஆர்.சுரேஷ், ஸ்டீ பன், லெனின்பாரதி, தருமை யன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.