districts

img

பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

பாபநாசம், செப்.23 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 450-க்கும் மேற் பட்ட மாணவர்கள் படிக் கின்றனர். இதில் பல மாண வர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங் களைச் சேர்ந்தவர்கள்.  இந்தப் பள்ளிக்குரிய விளையாட்டு மைதானம் பள்ளி அருகில் உள்ளது. இதனுள் அரசு கிளை நூல கம் இயங்கி வருகிறது. விளையாட்டு மைதா னத்தின் முகப்பு காம்ப வுண்ட் சுவரின் ஒருபகுதி, சில ஆண்டுகளுக்கு முன்  பெய்த மழையில் உடைந்து விழுந்து விட்டது. விழுந்த காம்பவுண்ட் சுவர்ப் பகுதி யில் கம்பிவேலி போடப் பட்டுள்ளது. இந்த கம்பி வேலியை அகற்றி விட்டு, தரமான முறையில் காம்ப வுண்ட் சுவர் கட்ட வேண்டு மென மாணவர்களின் பெற் றோர் கோரிக்கை வைத் துள்ளனர்.