districts

img

பாப்பா வாய்க்கால் மதகை விரைந்து சீரமைக்க கோரிக்கை

பாபநாசம், நவ.19-  அய்யம் பேட்டையில் தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் சாவடி பஜார் வழியாக பாப்பா வாய்க்கால் ஓடு கிறது.  பாசன வாய்க்கா லான பாப்பா வாய்க் கால் மதகின் ஒரு பகுதி சுவர் பெய்து வரும் மழையால் இடிந்து விழுந்தது. இந்தச் சாலைக்கு மாற்றாக புறவழிச் சாலை இருந்தாலும், கார், ஆட்டோ உள்ளிட்ட பல வாகனங்கள் இந்த சாலை வழியாகத் தான் செல்கின்றன. இரவு நேரங்களில் கனரக வாகனங்க ளும் இந்த வழியே சென்று வருகின்றன. எனவே, இந்தச் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மதகு சுவர் இடிந்து விழுந்ததால் வாகனங்கள் செல்வதில் இடையூறு உள்ளது. மேலும், சாலை சரியும் அபாயமும் உள்ளதால், மதகை விரைந்து சீரமைக்க அப் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.