தஞ்சாவூர், மார்ச் 15- சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தஞ்சை மாவட்டப் பேரவை வெள்ளிக் கிழமை தஞ்சை கணபதி நகரில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பி னர் ஆர்.கலைச்செல்வி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச் செல்வி, மாநிலச் செயற் குழு உறுப்பினர் பவித்ரா ஆகியோர் சிறப்புரையாற்றி னர். மாவட்டச் செயலாளர் இ. வசந்தி, மாவட்டப் பொரு ளாளர் என்.வசந்தா, மாநிலக் குழு உறுப்பினர் பி.கலைச் செல்வி, அம்மாபேட்டை ஒன்றியக் கவுன்சிலர் என். வெற்றிச்செல்வி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட் டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாவட்டக் குழு பொறுப்பு தலைவராக ஆர்.கலைச்செல்வி தேர்வு செய்யப்பட்டார். நூறு நாள் வேலைக் கான சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை தொ டர்ந்து வழங்க வேண்டும். நிதியை குறைத்து ஒதுக் கீடு செய்து திட்டத்தை சீர்கு லைக்கும் மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.