districts

சாதி மறுப்பு திருமணத்திற்கு தனிச் சட்டம் இயற்ற கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 23- நீட் தேர்வை ரத்து செய்ய  வேண்டும். தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மா னத்திற்கு குடியரசுத் தலை வர் ஒப்புதல் அளிக்க வேண்டும். சாதி மறுப்பு திரு மணம் செய்த தம்பதி களுக்கு ஆதரவு கொடுத்த  காரணத்திற்காக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் திரு நெல்வேலி அலுவலகத்தை தாக்கிய சாதி வெறியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவ டிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசாங்கம் சாதி மறுப்பு திருமணத்திற்கு தனிச்  சட்டம் இயற்ற வேண்டும். கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயம் குடித்து பலி யான குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலை கிடைத் திட தமிழக அரசாங்கம் வழி வகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பேட்டை ஒன்றியக் குழு சார்பில் சனிக்கிழமை தா. பேட்டை கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டக் குழு உறுப்பி னர் பாலகுமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் நடராஜன், ஒன்றியச்  செயலாளர் பாண்டியன், மூத்த தோழர் சுப்பிரமணி யன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட் டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.