அரியலூர், ஏப்.20 - ஏப்.19 அன்று வாக்குப் பதிவு முடிந்த நிலையில், சனிக்கிழமை டெல்டா மாவட்டங்களில் கட்சி முகவர்கள் முன் னிலையில் வாக்குப் பெட்டிகள் பாது காப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீல் இடப்பட்டன. அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப் பதிவு முடிந்த நிலையில், கட்சி முகவர்களின் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் சனிக்கிழமை தத்த னூர் மீனாட்சி ராமசாமி கலை அறிவி யல் கல்லூரியில் சீல் வைக்கப்பட்டன. கல்லூரியில், ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை களில் பதிவு செய்யப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட் டதை பொது தேர்தல் பார்வையாளர் போர் சிங் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சிதம்ப ரம் நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவள வன் மற்றும் அனைத்து கட்சி வேட்பா ளர்கள், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் மற்றும் முகவர் கள் முன்னிலையில் சீல் வைக்கப் பட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை இக்கல்லூரி முழுவதும் வெப் கேமரா கண்காணிப்பு, துணை ராணு வத்தினர் பாதுகாப்பு, உள்ளூர் காவல் துறையினர் பாதுகாப்பு என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்போர், மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு உள்ள அடையாள அட்டை வைத்திருப் போர் மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தொகுதியில் 76.37 சதவீத வாக்குப்பதிவு
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி யில் வெள்ளியன்று வாக்குப்பதிவு முடி வுற்ற நிலையில், குன்னம் சட்டமன்றத் தொகுதியில் 76.80 சதவீதமும், அரிய லூர் தொகுதியில் 81.61 சதவீதமும், ஜெயங்கொண்டத்தில் 78.47 சதவீத மும், புவனகிரியில் 75.46 சதவீதமும், சிதம்பரத்தில் 71.68 சதவீதமும், காட்டு மன்னார்கோவிலில் 73.55 சதவீதமும் என வாக்குகள் பதிவாகின என்று தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஏழு பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினம் தொகுதியில் 71.89 சதவீத வாக்குகள் பதிவு நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். கீழ்வேளூர் சட்ட மன்ற தொகுதியில் 78.19 சதவீத வாக்கு களும், வேதாரண்யத்தில் 74.29 சதவீத மும், நாகப்பட்டினத்தில் 70.23 சதவீத மும், திருவாரூரில் 71.29 சதவீதமும், திருத்துறைப்பூண்டியில் 68.25 சதவீத மும், நன்னிலத்தில் 71.56 சதவீத வாக்கு களும் பதிவாகின. நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக கீழ்வேளூர் தொகுதியில் 78.19 சதவீத வாக்குகளும், திருவாரூர் தொகுதியில் குறைந்தபட்ச மாக 68.25 சதவீத வாக்குகளும் பதி வாகியுள்ளன. பதிவு செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகள் முத்திரையிடப்பட்டு நாகப் பட்டினம், ஈசிஆர் சாலையில் அமைந் துள்ள பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை தொகுதியில் 70.06 சதவீதம் வாக்குப்பதிவு
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் 70.06 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் ,தொகுதிக் குட்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்ப கோணம், பாபநாசம் ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு கள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்தி ரங்கள், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகா பாரதி, தேர்தல் பார்வையாளர் (பொது) கன்ஹீராஸ் ஹச் பகதே, வேட்பாளர்கள், முகவர்கள், அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி கள் முன்னிலையில் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப் பட்டு சீல் இடப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறை களில் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 நேரமும் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 57 மத்திய பாதுகாப்பு படை வீரர்களும், 90 தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவ லர்களும், 200 காவலர்களும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, மயிலாடுதுறை வரு வாய் கோட்டாட்சியர் யுரேகா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, கும்பகோணம் வருவாய் கோட்டாட்சி யர் பூர்ணிமா, திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன், பாப நாசம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 71.72 சதவீத வாக்குப்பதிவு
திருச்சி மக்களவைத் தொகுதிக்குட் பட்ட கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் 73.76 சதவீதமும், புதுக் கோட்டை தொகுதியில் 67.83 சதவீத மும் வாக்குப் பதிவாகியுள்ளது. சிவகங்கை தொகுதிக்குட்பட்ட திருமயம் தொகுதியில் 65.85 சதவீத மும், ஆலங்குடி தொகுதியில் 73.62 சத வீதமும் வாக்குப் பதிவாகி உள்ளது. கரூர் தொகுதிக்குட்பட்ட விராலிமலை தொகுதியில் 80.49 சதவீதமும், இராம நாதபுரம் தொகுதிக்குட்பட்ட அறந் தாங்கி தொகுதியில் 68.80 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்த மாவட்ட சராசரியாக 71.72 சதவீதம் வாக்குப் பதிவாகி உள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் மையம் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகு திக்குட்பட்ட தஞ்சாவூர், திருவை யாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய சட்ட மன்றத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்தி ரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கும் பணிகள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தேர்தல் பொதுப் பார்வையா ளர் ஒய்.கிகேட்டோ சேம, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோர் தலைமையில், வேட் பாளர்கள்-முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் 264 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு காவல் பணியில் 25 துணை மத்திய ஆயுதப் படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பணியமர்த்தப் பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போ டப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக் கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வின் போது மாவட்ட வரு வாய் அலுவலர் தெ.தியாகராஜன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவ லர்கள் கலந்து கொண்டனர். கரூர் தொகுதியில் 78.61 சதவீத வாக்குகள் பதிவு கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 78.61 சதவீத வாக்குகள் பதி வாகின. கரூர் மக்களவை தொகுதிக்குட் பட்ட கரூர் சட்டமன்ற தொகுதியில் 80.91 சதவீதமும், கிருஷ்ணராயபுரம் சட்ட மன்றத் தொகுதியில் 82.66 சதவீதமும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி யில் 78.84 சதவீதமும், மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் 75.97 சதவீத மும், விராலிமலை சட்டமன்றத் தொகு தியில் 80.49 சதவீதமும், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 74.43 சதவீத வாக்குகளும் பதிவாகின. மொத்தம் 78. 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் அலு வலர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.